-துமி
தேடுதலில்..
வாழ்தலுக்கான சுதந்திரம்
உள்ளும்,புறமும் பரந்து விரிந்த
தருணங்களில்
சுயத்தைத் தேடும் முயற்சியின்
பகிர்தலில்
ரணங்களே எஞ்சுவதாய்
சிதறுண்ட மனதின்
மரணத்தின் பின்னும் வாழும் மானுடம்
வெற்று உணர்வுள்ள
சதைப் பிண்டங்களாய்
அ-நித்தியம்
இழப்பு ஈடுசெய்யமுடியாதது
எல்லா உயிர்களுக்கும்
மரணத்தின் வாயிலில்
பேதமை இல்லை
எழுதிவைக்கப்பட்ட நாட்களை
கழிக்க வந்திருக்கும்
சூத்திரதாரி வாழ்க்கை இது
வாழ்ந்தது போதுமென
இருப்பே இறப்பாய்…
சாத்தான்
கூவியும் கதறியும்
பெற்றுப் பறித்த பார்வையாய்
தாய் முலை மரவா பிஞ்சை
பறித்துச் செல்லும்
கடவுளும் சாத்தான்தான்
என் அகராதியில்.
——–
படிமங்களாய் உறைந்துபோன
இதயத்தோடு உயிர் பிரியா
உடல்கள் உலவும் ஒப்பனையோடு
காவியங்கள் காலத்தால் அழியும்
கடற்கரையில் சிலைவைக்க
இடமின்றிப் போகும்
இயந்திரத்தால் மானுடம் சாகும்
இவை அனைத்தும் நடந்தும் கடந்தும்
இதோ என்றும்
நிலைமாறா பெண்மை..
ஓவியம்: கோல்விட்ஸ்
nuba69@gmail.com
துமியின் மரணம் குறித்த கவிதைகள் பற்றி: மனிதவர்க்கத்திற்கு மரணத்தினை சாபமாக பரிசளித்தவன் சாத்தான். எப்படி என்றால், ஆதாமை கடவுளுக்கு எதிராக பாவம் செய்யவைத்ததன் மூலம். பாவத்தின் சம்பளம் மரணம். ஜீவிய காலமெல்லாம் மனிதர்க்கு மரண பயத்தை உண்டுபண்ணுதல்தான் அவனது மிகப்பெரிய செயற்திட்டம். மரணத்தின் அதிபதி சாத்தான். நரகத்திற்கு ஆள் சேர்ப்பது தான் அவன் வேலை. மனிதன் தொடர்ந்து பாவம் செய்கிறான். மரணமும் தொடர்கிறது. பரலோகத்தில் கடவுளை என்னேரமும் துதிக்கும் குளுவிற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட லூசிபார் என்ற தூதன், கடவுளின் துதியை தனக்கு பெறும்படி மனதில் எண்ணினான். மிக்கேல் தூதனால் அங்கிருந்து கீழே தள்ளப்பட்டான்.கோபப்பட்டான்.கடவுளுக்குப்பிடிக்காதது என்னவென்று நன்று அறிந்தவன் அவன். அதுதான் பாவம். பாவத்தைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணர் கடவுள்.-ஆதாரம் விவிலியம்